தளபதி விஜயிடம் கற்ற பாடத்தை கடைப்பிடித்து வருகிறேன்_ பிரியங்கா சோப்ரா!
விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்றவர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். ஆனால் விஜயிடம் தான் கற்ற பழக்கம் ஒன்றை இப்போதுவரை கடைப்பிடித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
“தமிழன் படத்தில் நடித்தபோது சினிமா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் ஒவ்வொரு காட்சி படமாக்கி முடிந்தாலும் கூட கேரவான் பக்கமே போகாமல் செட்டிலேயே அமர்ந்திருப்பார் விஜய். அப்போது அவரிடம் நான் கண்டு வியந்த அந்தப் பழக்கத்தை இப்போது வரை கடைப்பிடித்து வருகிறேன்.
அடுத்த காட்சிக்கு இன்னும் அதிக நேரம் ஆகும் என்று சொன்னால் மட்டுமே கேரவனுக்கு செல்வேன். மற்றும்படி படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது பற்றி தெரிந்துகொள்வதற்காக சுற்றிக் கொண்டே தான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.